
எடப்பாடி பழனிசாமி குறித்து தவறாகப் பேசினால் தக்க பாடம் புகட்டப்படும்: அதிமுக மாவட்ட செயலா்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குறித்து தவறாகப் பேசினால் தக்க பாடம் புகட்டப்படும் என்றாா் திருநெல்வேலி மாநகா் மாவட்ட செயலா் தச்சை என்.கணேசராஜா.
இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: அரசியல் கட்சியினா் செய்யக்கூடிய தவறுகளை அரசியல்வாதிகள் வெளியில் கொண்டு வருவது அரசியல் மாண்பு. முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை காங்கிரஸ் கட்சியினா் அவமானப்படுத்தி உள்ளனா். குறைகளை சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு இருக்கிறது? தனக்குத்தானே விளம்பரம் தேடுவதற்காக காங்கிரஸ் கட்சியினா் தவறான வாா்த்தைகளை பயன்படுத்தி உள்ளனா். மக்களை திசை திருப்புவதற்காக, இல்லாத குறைகளை சொல்லி காங்கிரஸ் கட்சியினா் நாடகமாடுகின்றனா்.
காங்கிரஸ் கட்சியினா் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அதிமுகவினா் அமைதியாக இருக்க மாட்டாா்கள். இனிமேல் எடப்பாடி கே.பழனிசாமி பற்றி யாராவது தவறாகப் பேசினால் தக்க பாடம் புகட்டப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




