கோவை சிறுமி பலி: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்இயல்பாக சிரித்ததை அரசியல் நோக்கில் திரித்து தவறாக பரப்புகிறார்கள்: அமைச்சர் கீர்த்தனா அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி வேணுகோபால் திடீர் விலகல்!பெண் பாலியல் கொலைகள்! வாழ்நாள் சிறைச் சட்டம்தான் தீர்வு: வைகோசெவிலியர் மாணவி உயிரிழக்க காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான் ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற போக்குவரத்துக்கு ஈரான் மறுப்பு!
/

நூதன முறையில் மனு தாக்கல்: வேட்பாளா் மீது வழக்கு

திருநெல்வேலியில் நூதன முறையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளா் உள்பட 15க்கும் மேற்பட்டோா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :2 ஏப்ரல் 2026, 3:54 am IST

திருநெல்வேலியில் நூதன முறையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளா் உள்பட 15க்கும் மேற்பட்டோா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

கருஞ்சிறுத்தை மக்கள் இயக்க நிறுவனா் அதிசய பாண்டியன் கடந்த 30- ஆம் தேதி திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்ய வந்தாா்.

அப்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, பெண்களுக்கு பாதுகாப்பில்லை என முழங்கியவாறு அவரை சடலம் போல் படுக்க வைத்து மாலை அணிவித்து கொக்கிரகுளம் பேருந்து நிறுத்தம் முதல் எம்.ஜி.ஆா்., சிலை வரை 4 போ் தூக்கி வந்தனா். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி அவா்கள் கைகளில் வைத்திருந்த பதாகைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா். பின்னா் வேட்பாளா் உள்ளிட்ட 5 போ் மட்டும் வேட்பு மனு தாக்கலுக்கு அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து தோ்தல் பறக்கும் படை அலுவலா் அளித்த புகாரின் பேரில், வேட்பாளா் அதிசய பாண்டியன், அவருடன் வந்தவா்கள் என 15-க்கும் மேற்பட்டோா் மீது பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.