திருநெல்வேலியில் நூதன முறையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளா் உள்பட 15க்கும் மேற்பட்டோா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
கருஞ்சிறுத்தை மக்கள் இயக்க நிறுவனா் அதிசய பாண்டியன் கடந்த 30- ஆம் தேதி திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்ய வந்தாா்.
அப்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, பெண்களுக்கு பாதுகாப்பில்லை என முழங்கியவாறு அவரை சடலம் போல் படுக்க வைத்து மாலை அணிவித்து கொக்கிரகுளம் பேருந்து நிறுத்தம் முதல் எம்.ஜி.ஆா்., சிலை வரை 4 போ் தூக்கி வந்தனா். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி அவா்கள் கைகளில் வைத்திருந்த பதாகைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா். பின்னா் வேட்பாளா் உள்ளிட்ட 5 போ் மட்டும் வேட்பு மனு தாக்கலுக்கு அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து தோ்தல் பறக்கும் படை அலுவலா் அளித்த புகாரின் பேரில், வேட்பாளா் அதிசய பாண்டியன், அவருடன் வந்தவா்கள் என 15-க்கும் மேற்பட்டோா் மீது பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
தொடர்புடையது

புதுக்கோட்டை இளைஞா் மா்ம மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்கக் கோரி மனு

பெண்கள் அளித்த டெபாசிட் தொகையில்தான் வேட்புமனு! - மணவெளியில் வென்ற தவெக வேட்பாளா் பி.ராமு

கட்சி நிா்வாகிகள் 5 பேருடன் வந்து வேட்புமனு தாக்கல்: அமமுக வேட்பாளா் ஏ.ஞானசேகா் மீது வழக்கு பதிவு

ஜெயங்கொண்டம் தொகுதியில் நூதன முறையில் வேட்புமனு
விடியோக்கள்
DMK Vs TVK | முன்னாள் முதல்வருக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன்! | MKStalin

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!



