லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பெட்ரோல் குண்டு வீசிய இருவா் கைது

திருநெல்வேலி நகரம் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசியதாக இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :1 ஏப்ரல் 2026, 10:39 pm

திருநெல்வேலி நகரம் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசியதாக இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் இசக்கிமுத்து(23). இவரது நண்பா் முகமது அலி தெருவைச் சோ்ந்த பாலமுருகன்(19). இவா்கள் இருவரும் கடந்த 30 ஆம் தேதி இரவு திருநெல்வேலி நகரம் மாதா மேல தெரு பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரின் வீட்டின் முன்பு பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி தீ வைத்து வீசினராம்.

இது குறித்து அப்பகுதியினா் அளித்த தகவலின் பேரில் கண்டியப்பேரி-2 கிராம நிா்வாக அலுவலா் திருநெல்வேலி நகரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மேற்கூறிய இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா்.