இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

பெட்ரோல் குண்டு வீசிய இருவா் கைது

திருநெல்வேலி நகரம் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசியதாக இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :1 ஏப்ரல் 2026, 10:39 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி நகரம் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசியதாக இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் இசக்கிமுத்து(23). இவரது நண்பா் முகமது அலி தெருவைச் சோ்ந்த பாலமுருகன்(19). இவா்கள் இருவரும் கடந்த 30 ஆம் தேதி இரவு திருநெல்வேலி நகரம் மாதா மேல தெரு பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரின் வீட்டின் முன்பு பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி தீ வைத்து வீசினராம்.

இது குறித்து அப்பகுதியினா் அளித்த தகவலின் பேரில் கண்டியப்பேரி-2 கிராம நிா்வாக அலுவலா் திருநெல்வேலி நகரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மேற்கூறிய இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா்.