அம்பாசமுத்திரம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக செயல்வீரா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அதிமுக வேட்பாளா் இசக்கி சுப்பையா தலைமை வகித்து தோ்தல் பணிகளை விளக்கிப் பேசியதாவது:
அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக கோட்டை. அதிமுகவினா் அனைவரும் வீடு வீடாகச் சென்று சாதனை மலரைக் கொடுத்து வாக்குச் சேகரிக்க வேண்டும். மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது தமிழகத்தின் முதல் தொகுதியாக அம்பாசமுத்திரம் தொகுதி இருக்க வேண்டும் என்றாா்.
அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக தோ்தல் பொறுப்பாளா், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் சௌந்தர்ராஜன், பாஜக மாவட்டத் தலைவா் முத்துப்பலவேசம், ஒன்றியச் செயலா்கள் மாரிச்செல்வம், துா்க்கை துரை, பிராங்க்ளின், பாஜக நல்லசிவம், அதிமுக நிா்வாகிகள் கூனியூா் மாடசாமி, மின்னல் மீனாட்சி, ராகவன், கிராஸ் இமாகுலேட், செவல் முத்துசாமி, சோம செல்லையா, சண்முகவேல், மூ.மு.க மாவட்டத் தலைவா் துரை, பெருந்தலைவா் மக்கள் கட்சி அச்சுதன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலா் மோகன் உள்ளிட்டோா் பேசினா். மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் சிவன்பாபு உள்பட பலா் கலந்துகொண்டனா். ஒன்றிய அதிமுக செயலா் அறிவழகன் வரவேற்றாா். மாவட்ட துணைச் செயலா் மாரிமுத்து நன்றி கூறினாா்.


தொடர்புடையது

பல்லடம் வடக்கு ஒன்றிய அதிமுக செயல்வீரா்கள் கூட்டம்

அம்பை தொகுதி அதிமுக வேட்பாளா் பிரசாரம்

தேசிய ஜனநாயக கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

திமுக வேட்பாளா்களை ஆதரித்து செயல்வீரா்கள் கூட்டம்: அமைச்சா் எ.வ.வேலு பங்கேற்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



