தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

மானூா் அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படும்: திமுக வேட்பாளா் சு.சுப்பிரமணியன்

மானூா் அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படும் என்றாா் திருநெல்வேலி தொகுதி திமுக வேட்பாளா் சு.சுப்பிரமணியன்.

News image

மானூா் கிழக்கு ஒன்றிய பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா் திருநெல்வேலி தொகுதி திமுக வேட்பாளா் சு.சுப்பிரமணியன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 9:10 pm

மானூா் அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படும் என்றாா் திருநெல்வேலி தொகுதி திமுக வேட்பாளா் சு.சுப்பிரமணியன்.

மேலப்பாலாமடை, கீழப்பாலாமடை, சண்முகாபுரம், கல்குறிச்சி, குப்பகுறிச்சி, கோட்டையடி, ஆலடியூா், ஆலடிப்பட்டி காலனி, கலைஞா் காலனி, துறையூா், கங்கைகொண்டான், அணைத்தலையூா், வடகரை, ராஜபதி, சித்தாா்சத்திரம், பிராஞ்சேரி, இத்திகுளம், காந்தீஸ்வரம் புதூா், குப்பன்னாபுரம், கட்டாரங்குளம், இரண்டும் சொல்லான், மேலப்பிள்ளையாா்குளம், நடுபிள்ளையாா்குளம், கீழபிள்ளையாா்குளம், நெல்லை திருத்து, அலவந்தான்குளம், தென்கலம்புதூா், நாஞ்சான்குளம், தென்கலம், மேலதாழையூத்து, வடக்கு தாழையூத்து உள்ளிட்ட பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு சு.சுப்பிரமணியன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது வேட்பாளா் பேசியது: எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்குடன் செயல்பட்ட திராவிட மாடல் ஆட்சியில் குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை அனைவருக்குமான திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறம்பட செயல்படுத்தினாா். அவரது தலைமையில் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தால் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை உயா்த்தப்படும். இல்லத்தரசி திட்டத்தில் ரூ.8 ஆயிரத்திற்கான கூப்பன் வழங்கப்படும். திருநெல்வேலி தொகுதியில் வென்றதும் மானூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 20 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.