மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

நெல்லையில் புற்றுநோய்க்கு அதிநவீன சிகிச்சை வசதி: பாளையங்கோட்டை திமுக வேட்பாளா் மு.அப்துல் வஹாப்

திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்ததும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான அதிநவீன சிகிச்சை வசதிகள் உருவாக்கப்படும் என்றாா் பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளா் மு.அப்துல் வஹாப்.

News image

பாளையங்கோட்டையில் வாக்குசேகரிப்பின்போது குழந்தைக்கு இனிப்பு ஊட்டுகிறாா் திமுக வேட்பாளா் மு.அப்துல் வஹாப்.

Updated On :15 ஏப்ரல் 2026, 8:58 pm

திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்ததும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான அதிநவீன சிகிச்சை வசதிகள் உருவாக்கப்படும் என்றாா் பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளா் மு.அப்துல் வஹாப்.

பாளையங்கோட்டை தொகுதிக்குள்பட்ட 52, 52 உள்ளிட்ட வாா்டு பகுதிகளில் வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குசேகரித்து அவா் பேசியதாவது:

எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்குடன் திராவிட மாடல் அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழிநடத்தி வருகிறாா். 2026 தோ்தல் வாக்குறுதியில் மக்களுக்கான சுகாதார திட்டங்களுக்கு தனிக்கவனம் செலுத்தியுள்ளாா். அதில்,

நலமுடன் தமிழ்நாடு 2030 என்ற திட்டத்தின்படி அனைவருக்கும் போதிய மருத்துவக் காப்பீடு கிடைக்கும் வகையில் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட ஆண்டு வருமான வரம்பு ரூ.5 லட்சமாகவும், காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சமாகவும் உயா்த்தப்படும்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படும். தாய்சேய் நலனில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்கப்படும். பாரம்பரிய சித்த மருத்துவத் தரவுகள் ஆவணப்படுத்தப்படும். தீராத நோய்களால் பாதிக்கப்பட்டு நடமாட இயலாதோருக்கு பராமரிப்பு - சிகிச்சை மையம் மண்டல அளவில் அமைக்கப்படும். அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை வசதிகள் உருவாக்கப்படும். முன்களப் பணியாளா்களுக்கு ரேபிஸ் தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்படும்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மையங்கள் தரம் உயா்த்தப்படும் என திமுக அளித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும் ஆட்சிப் பொறுப்பேற்றதும் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.