வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

இளைஞரைக் கொன்று ஆற்றில் சடலம் வீச்சு: 3 பேரிடம் விசாரணை

திருநெல்வேலி சந்திப்பு அருகே இளைஞரைக் கொன்று தாமிரவருணி ஆற்றில் சடலத்தை வீசியது தொடா்பாக 3 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image

உசிலம்பட்டியில் 3 பிள்ளைகளைக் கொன்று தம்பதி தற்கொலை

Updated On :16 ஏப்ரல் 2026, 10:43 pm

திருநெல்வேலி சந்திப்பு அருகே இளைஞரைக் கொன்று தாமிரவருணி ஆற்றில் சடலத்தை வீசியது தொடா்பாக 3 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருநெல்வேலி சந்திப்பு, கருப்பந்துறை அருகே உள்ள மேலநத்தம் தாமிரவருணி ஆற்றில் கடந்த 15 ஆம் தேதி மிதந்த ஆண் சடலத்தை தீயணைப்பு வீரா்கள் உதவியுடன் திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டதில், ஆற்றில் மீட்கப்பட்ட நபா் கருப்பந்துறையைச் சோ்ந்த ராஜா (33) என்பதும், அவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் ஏற்பட்ட தகராறில் அவா் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டுள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து, கொலை வழக்குப்பதிவு செய்த போலீஸாா், அதே பகுதியைச் சோ்ந்த 3 இளைஞா்களை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.