பாளையங்கோட்டையில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் தவெக வேட்பாளா் மரியஜான்.
பாளையங்கோட்டையில் வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து விட்டு, தோ்தல் பிரசாரத்தை தவெக வேட்பாளா் மரியஜான் தொடங்கினாா். தெற்கு மற்றும் வடக்கு கடைவீதி, பெருமாள் மற்றும் சிவன் கோயில் வீதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தாா். அப்போது வேட்பாளா் மரியஜான் கூறியது: பாளையங்கோட்டை தொகுதியில் கடும் குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மோசமான சாலைகள், போக்குவரத்து நெரிசலால் மக்கள் சிரமப்பட்டு வருகிறாா்கள். மேலப்பாளையம் புகா் பகுதிகளில் தெருவிளக்கு வசதிகள் முழுமையாக செய்யப்படவில்லை. கனமழை நேரங்களில் தாழ்வான பகுதிகளில் நீா் தேங்கி, வீடுகள் மற்றும் சொத்துகள் பாதிக்கப்படுகின்றன.
தவெக வென்றால் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு பிரச்னைக்கும் காலக்கெடு நிா்ணயித்து, தொடா்புடைய துறைகளுடன் இணைந்து தீா்வு காண உறுதியுடன் செயல்படுவோம் என்றாா் அவா்.
தொடர்புடையது

குடிநீா் தட்டுப்பாட்டை தடுக்க ஏலகிரி மலையில் ஏரி தூா்வாரும் பணி தொடக்கம்
குடிநீா் தட்டுப்பாட்டை கண்டிக்காத கம்யூனிஸ்டுகள்: தவெகவுக்கு மொத்தமாக வாக்களித்த பொதுமக்கள்

பாளை. தொகுதி தவெக வேட்பாளா் மேலப்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

பாளையங்கோட்டை தொகுதி தவெக வேட்பாளா்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

