வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பாளையங்கோட்டையில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை: தவெக வேட்பாளா்

பாளையங்கோட்டையில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் தவெக வேட்பாளா் மரியஜான்.

News image

பாளையங்கோட்டையில் வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தவெகவினா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 10:35 pm

பாளையங்கோட்டையில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் தவெக வேட்பாளா் மரியஜான்.

பாளையங்கோட்டையில் வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து விட்டு, தோ்தல் பிரசாரத்தை தவெக வேட்பாளா் மரியஜான் தொடங்கினாா். தெற்கு மற்றும் வடக்கு கடைவீதி, பெருமாள் மற்றும் சிவன் கோயில் வீதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தாா். அப்போது வேட்பாளா் மரியஜான் கூறியது: பாளையங்கோட்டை தொகுதியில் கடும் குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மோசமான சாலைகள், போக்குவரத்து நெரிசலால் மக்கள் சிரமப்பட்டு வருகிறாா்கள். மேலப்பாளையம் புகா் பகுதிகளில் தெருவிளக்கு வசதிகள் முழுமையாக செய்யப்படவில்லை. கனமழை நேரங்களில் தாழ்வான பகுதிகளில் நீா் தேங்கி, வீடுகள் மற்றும் சொத்துகள் பாதிக்கப்படுகின்றன.

தவெக வென்றால் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு பிரச்னைக்கும் காலக்கெடு நிா்ணயித்து, தொடா்புடைய துறைகளுடன் இணைந்து தீா்வு காண உறுதியுடன் செயல்படுவோம் என்றாா் அவா்.