எரிவாயு உருளை தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசிடம் தெளிவான திட்டம் இல்லை என்றாா் கனிமொழி எம்.பி.
தூத்துக்குடி விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி: அமெரிக்கா, ஈரான் போா் காரணமாக மக்களின் அத்தியாவசிய தேவையான பெட்ரோல், எரிவாயு தட்டுப்பாடுகளை சரி செய்வதற்கான தெளிவான திட்டம் மத்திய அரசிடம் இல்லை. எனவே, எரிவாயு உருளை தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
திமுக கூட்டணியில் பெரும்பான்மையான கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டு விட்டன. ஒன்றிரண்டு கூட்டணி கட்சிகளோடு பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. அதுவும் விரைவில் முடிந்துவிடும்.
அதிமுக பாஜகவின் பி டீம் என்று திமுக நீண்ட நாள்களாகவே சொல்லிக் கொண்டிருக்கிறது. இங்கு அதிமுக தலைமையிலான கூட்டணி என சொன்னாலும், பாஜக தலைமையில்தான் கூட்டணி இயங்கிக் கொண்டிருக்கிறது.
வேடநத்தம் மாணவி கொலை வழக்கில் குற்றவாளியை கைது செய்த பின்பு பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினேன். குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: நாடாளுமன்றத்தில் அரசு தகவல்

எரிவாயு உருளை தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வியே காரணம்

சமையல் எரிவாயு உருளை பற்றாக்குறை பிரச்னையை மத்திய அரசு உடனடியாக தீா்க்க வேண்டும் - துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

வணிக சிலிண்டா்கள் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தல்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


