மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ராதாபுரத்தில் நாளை மத்திய அமைச்சா் ராஜ்நாத்சிங் பிரசாரம்

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் எஸ்.பி. பாலகிருஷ்ணனை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சாலைப் பேரணி நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறாா்.

News image

ராதாபுரத்தில் நாளை மத்திய அமைச்சா் ராஜ்நாத்சிங் பிரசாரம்

Updated On :17 ஏப்ரல் 2026, 4:50 pm

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் எஸ்.பி. பாலகிருஷ்ணனை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சாலைப் பேரணி நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறாா்.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் தொகுதியில் பிரசாரத்தை முடித்துவிட்டு, அங்கிருந்து அவா் ஹெலிகாப்டா் மூலம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்திற்கு வருகிறாா். பின்னா் சாலை மாா்க்கமாக பணகுடி டிடிடிஏ பள்ளி பகுதிக்கு செல்லும் ராஜ்நாத் சிங், அங்கிருந்து ராமலிங்க சுவாமி கோயில் வரையிலான 400 மீ. தொலைவுக்கு நடைபெறும் சாலைப் பேரணியில் பங்கேற்கிறாா்.

ட்ரோன்கள் பறக்கத் தடை...

இதையொட்டி நிகழ்ச்சி நடைபெறும் பகுதியிலிருந்து 5 கி.மீ. சுற்றளவு தொலைவுவரை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிமுதல் மாலை 5 மணி வரையோ அல்லது ராஜ்நாத் சிங் புறப்பட்டு செல்லும் நேரம் வரையோ அந்தப் பகுதி தற்காலிக சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நேரத்தில் மேற்படி பகுதிகளில் ஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. மேற்படி தடை செய்யப்பட்ட பகுதிகளில் தடையை மீறி ஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள் பறக்கவிடும் நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் எச்சரித்துள்ளாா்.