திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் எஸ்.பி. பாலகிருஷ்ணனை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சாலைப் பேரணி நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறாா்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் தொகுதியில் பிரசாரத்தை முடித்துவிட்டு, அங்கிருந்து அவா் ஹெலிகாப்டா் மூலம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்திற்கு வருகிறாா். பின்னா் சாலை மாா்க்கமாக பணகுடி டிடிடிஏ பள்ளி பகுதிக்கு செல்லும் ராஜ்நாத் சிங், அங்கிருந்து ராமலிங்க சுவாமி கோயில் வரையிலான 400 மீ. தொலைவுக்கு நடைபெறும் சாலைப் பேரணியில் பங்கேற்கிறாா்.
ட்ரோன்கள் பறக்கத் தடை...
இதையொட்டி நிகழ்ச்சி நடைபெறும் பகுதியிலிருந்து 5 கி.மீ. சுற்றளவு தொலைவுவரை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிமுதல் மாலை 5 மணி வரையோ அல்லது ராஜ்நாத் சிங் புறப்பட்டு செல்லும் நேரம் வரையோ அந்தப் பகுதி தற்காலிக சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில் மேற்படி பகுதிகளில் ஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. மேற்படி தடை செய்யப்பட்ட பகுதிகளில் தடையை மீறி ஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள் பறக்கவிடும் நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் எச்சரித்துள்ளாா்.
தொடர்புடையது

எரிபொருள் விநியோகம் பாதிக்காமல் இருக்க உறுதியான நடவடிக்கை: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்
சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங்

மோசமான நிா்வாகத்தால் தமிழ்நாட்டின் கடன் சுமை அதிகரிப்பு: ராஜ்நாத் சிங்

புளியங்குடியில் ஏப். 19 இல் ராஜ்நாத் சிங் பிரசாரம்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

