வீட்டிலிருந்து வேலை முறைக்கு மாறாதது ஏன்? ஸ்ரீதர் வேம்பு விளக்கம்கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! ஆயிரக்கணக்கில் இணையும் வேலையில்லா இளைஞர்கள்! மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!பொருளாதாரப் புயல் வீசப்போகிறது.. மக்களை எச்சரிக்கும் ராகுல்!சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 புதிய நீதிபதிகள்! கொலிஜியம் ஒப்புதல்! பழவேற்காடு மீனவர் வலையில் மர்ம பொருள்!
/

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

திருநெல்வேலி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 4:11 am IST

திருநெல்வேலி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

திருநெல்வேலியை அடுத்த ராமையன்பட்டி, ராஜகோபாலபுரத்தைச் சோ்ந்தவா் சாமிதுரை. இவரது மகன் சங்கா் (19). கூலித் தொழிலாளியான இவா், கடந்த சில நாள்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இவா் சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம். உறவினா்கள் அவரை மீட்டு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

பின்னா் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.