மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

மேலப்பாளையத்தில் வன்கொடுமை வழக்கில் 3 போ் கைது

மேலப்பாளையத்தில் இளைஞரை ஜாதியை சொல்லி திட்டி தாக்கியதாக 3 பேரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :23 ஏப்ரல் 2026, 4:05 am IST

மேலப்பாளையத்தில் இளைஞரை ஜாதியை சொல்லி திட்டி தாக்கியதாக 3 பேரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

முன்னீா்பள்ளம், மேலக்கருங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து (22). இவரது நண்பா்கள் வீரளப்பெருஞ்செல்வி பகுதியைச் சோ்ந்த முத்துக்குட்டி (22), மேலப்பாளையம், சுபாஷ் சந்திரபோஸ் தெருவைச் சோ்ந்த மாடசாமி (21). இவா்கள் மூவருக்கும் மேலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகக்கனி என்பவருக்கும் இடையே செவ்வாய்க்கிழமை தகராறு ஏற்பட்டதாம். அப்போது மூவரும் சோ்ந்து ஆறுமுகக்கனியை தாக்கி ஜாதியை சொல்லி திட்டி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், மேலப்பாளையம் போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, 3 பேரையும் கைது செய்தனா்.