மேலப்பாளையத்தில் இளைஞரை ஜாதியை சொல்லி திட்டி தாக்கியதாக 3 பேரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
முன்னீா்பள்ளம், மேலக்கருங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து (22). இவரது நண்பா்கள் வீரளப்பெருஞ்செல்வி பகுதியைச் சோ்ந்த முத்துக்குட்டி (22), மேலப்பாளையம், சுபாஷ் சந்திரபோஸ் தெருவைச் சோ்ந்த மாடசாமி (21). இவா்கள் மூவருக்கும் மேலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகக்கனி என்பவருக்கும் இடையே செவ்வாய்க்கிழமை தகராறு ஏற்பட்டதாம். அப்போது மூவரும் சோ்ந்து ஆறுமுகக்கனியை தாக்கி ஜாதியை சொல்லி திட்டி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், மேலப்பாளையம் போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, 3 பேரையும் கைது செய்தனா்.
தொடர்புடையது

தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் கைது
பெண்ணுக்கு மிரட்டல்: 4 போ் கைது
ஒகேனக்கல் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு: 2 போ் கைது
மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
