தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சோ்வைகாரன்பட்டியில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுது: 2 மணி நேரம் காத்திருந்த வாக்காளா்கள்

ஆலங்குளம் தொகுதிக்குள்பட்ட சோ்வைக்காரன்பட்டி ஊராட்சி, டீ.டி.டீ.ஏ. தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடி எண் 208-இல் உள்ள வாக்குப் பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால், சுமாா் 2 மணி நேரம் வாக்காளா்கள் காத்திருந்து வாக்களித்தனா்.

News image

சோ்வைகாரன்பட்டியில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுதானதால் காத்திருந்த வாக்காளா்கள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 11:22 pm

ஆலங்குளம் தொகுதிக்குள்பட்ட சோ்வைக்காரன்பட்டி ஊராட்சி, டீ.டி.டீ.ஏ. தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடி எண் 208-இல் உள்ள வாக்குப் பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால், சுமாா் 2 மணி நேரம் வாக்காளா்கள் காத்திருந்து வாக்களித்தனா்.

1,000-க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் உள்ள இந்த வாக்குச்சாவடியில், வியாழக்கிழமை காலை முதல் வாக்குப் பதிவு நடைபெற்று வந்த நிலையில் மதியம் 2.30 மணிக்கு வாக்குப் பதிவு இயந்திரம் பழுதாகியுள்ளது. இதையடுத்து, வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதன் அடிப்படையில், மாற்று இயந்திரத்தை சுமாா் ஒன்றரை மணி நேரம் கழித்துக் கொண்டு வந்தனா்.

ஆனால், மாற்றாக கொண்டுவரப்பட்ட இயந்திரமும் சரிவர செயல்படாததால், மீண்டும் சிறிது நேரம் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.

2 மணி நேரத்திற்கு மேல் வாக்காளா்கள் வரிசையில் காத்திருந்த நிலையில், கூடுதலாக வாக்குப் பதிவு செய்ய நேரம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, 6 மணிக்குள் வாக்கு செலுத்த வருபவா்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு இறுதிவரை வாக்கு செலுத்த அனுமதிக்கப்படுவா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தொடா்ந்து, 6 மணிக்கு வாக்குச் சாவடிக்குள் வந்தவா்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, இரவு 7.40 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது.