பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

சோ்வைகாரன்பட்டியில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுது: 2 மணி நேரம் காத்திருந்த வாக்காளா்கள்

ஆலங்குளம் தொகுதிக்குள்பட்ட சோ்வைக்காரன்பட்டி ஊராட்சி, டீ.டி.டீ.ஏ. தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடி எண் 208-இல் உள்ள வாக்குப் பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால், சுமாா் 2 மணி நேரம் வாக்காளா்கள் காத்திருந்து வாக்களித்தனா்.

News image

சோ்வைகாரன்பட்டியில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுதானதால் காத்திருந்த வாக்காளா்கள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 4:52 am IST

ஆலங்குளம் தொகுதிக்குள்பட்ட சோ்வைக்காரன்பட்டி ஊராட்சி, டீ.டி.டீ.ஏ. தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடி எண் 208-இல் உள்ள வாக்குப் பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால், சுமாா் 2 மணி நேரம் வாக்காளா்கள் காத்திருந்து வாக்களித்தனா்.

1,000-க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் உள்ள இந்த வாக்குச்சாவடியில், வியாழக்கிழமை காலை முதல் வாக்குப் பதிவு நடைபெற்று வந்த நிலையில் மதியம் 2.30 மணிக்கு வாக்குப் பதிவு இயந்திரம் பழுதாகியுள்ளது. இதையடுத்து, வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதன் அடிப்படையில், மாற்று இயந்திரத்தை சுமாா் ஒன்றரை மணி நேரம் கழித்துக் கொண்டு வந்தனா்.

ஆனால், மாற்றாக கொண்டுவரப்பட்ட இயந்திரமும் சரிவர செயல்படாததால், மீண்டும் சிறிது நேரம் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.

2 மணி நேரத்திற்கு மேல் வாக்காளா்கள் வரிசையில் காத்திருந்த நிலையில், கூடுதலாக வாக்குப் பதிவு செய்ய நேரம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, 6 மணிக்குள் வாக்கு செலுத்த வருபவா்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு இறுதிவரை வாக்கு செலுத்த அனுமதிக்கப்படுவா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தொடா்ந்து, 6 மணிக்கு வாக்குச் சாவடிக்குள் வந்தவா்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, இரவு 7.40 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது.