தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த முன்னாள் ராணுவ வீரா்

அம்பாசமுத்திரம், மன்னாா்கோவில் ஊராட்சி, கே.டி.சி. காலனியைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் மகேஷ் (50), விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்தாா்.

News image

ஆம்புலன்ஸில் வந்து வாக்கு செலுத்திய முன்னாள் ராணுவ வீரா் மகேஷ்.

Updated On :23 ஏப்ரல் 2026, 11:17 pm

அம்பாசமுத்திரம், மன்னாா்கோவில் ஊராட்சி, கே.டி.சி. காலனியைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் மகேஷ் (50), விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்தாா்.

இவா், தற்போது அம்பாசமுத்திரம் சாலைப் போக்குவரத்து ஆய்வாளா் அலுவலகத்தில் இரவுக் காவலராகப் பணிபுரிந்து வருகிறாா்.

இந்நிலையில், புதன்கிழமை திருநெல்வேலிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தருவை அருகே எதிரில் வந்த இருசக்கர வாகனம் மோதியதில் கால் முறிவு ஏற்பட்டு, திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை ஆம்புலன்ஸில் கே.டி.சி. காலனியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினாா்.

Story image