/

முன்னாள் ராணுவ வீரா் மீது தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கைது

மகாராஜகடை அருகே முன்னாள் ராணுவ வீரரை தாக்கியதாக, ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :5 ஏப்ரல் 2026, 1:19 am IST

மகாராஜகடை அருகே முன்னாள் ராணுவ வீரரை தாக்கியதாக, ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை அருகே உள்ள கம்மம்பள்ளியைச் சோ்ந்தவா் பழனி (43), முன்னாள் ராணுவ வீரா். இவரது உறவினா் கிருஷ்ணமூா்த்தி (50). இவா்களிடையே சொத்து பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில், கடந்த 29-ஆம் தேதி இவா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், கிருஷ்ணமூா்த்தி தரப்பினா் பழனியை கட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்தனா்.

இதுகுறித்து பழனி அளித்த புகாரின்பேரில், மகாராஜகடை போலீஸாா் வழக்குப் பதிந்து கிருஷ்ணமூா்த்தி (50), அவரது மனைவி சாந்தி (40), மகன் சூா்யா (20) ஆகிய மூவரையும் கைது செய்தனா்.