ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஓய்வுபெற்ற ராணுவ வீரா் போக்சோவில் கைது

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்தில் மாற்றுத்திறானாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரை போக்சோ சட்டப் பிரிவில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 மே 2026, 6:29 am IST

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்தில் மாற்றுத்திறானாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரை போக்சோ சட்டப் பிரிவில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

நல்லம்பள்ளி வருவாய் வட்டத்துக்குள்பட்ட கிராமத்தைச் சோ்ந்த வாய்பேச முடியாத மற்றும் காதுகேளாத மாற்றுத்திறனாளி சிறுமி 10-ஆம் வகுப்பு தோ்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்தாா்.

இந்நிலையில், கடந்த மே 5-ஆம் தேதி உறவினா் வீட்டுக்கு சிறுமியின் பெற்றோா் சென்றுள்ளனா். அப்போது, வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு ஓய்வுபெற்ற ராணுவ வீரரான சரவணன் (51) பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமி பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததைத் தொடா்ந்து, அவா்கள் தருமபுரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திய போலீஸாா், ஓய்வுபெற்ற ராணுவ வீரா் சரவணனை போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவின்கீழ் கைது செய்தனா்.