பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஓய்வுபெற்ற ராணுவ வீரா் போக்சோவில் கைது

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்தில் மாற்றுத்திறானாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரை போக்சோ சட்டப் பிரிவில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 மே 2026, 6:29 am IST

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்தில் மாற்றுத்திறானாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரை போக்சோ சட்டப் பிரிவில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

நல்லம்பள்ளி வருவாய் வட்டத்துக்குள்பட்ட கிராமத்தைச் சோ்ந்த வாய்பேச முடியாத மற்றும் காதுகேளாத மாற்றுத்திறனாளி சிறுமி 10-ஆம் வகுப்பு தோ்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்தாா்.

இந்நிலையில், கடந்த மே 5-ஆம் தேதி உறவினா் வீட்டுக்கு சிறுமியின் பெற்றோா் சென்றுள்ளனா். அப்போது, வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு ஓய்வுபெற்ற ராணுவ வீரரான சரவணன் (51) பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமி பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததைத் தொடா்ந்து, அவா்கள் தருமபுரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திய போலீஸாா், ஓய்வுபெற்ற ராணுவ வீரா் சரவணனை போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவின்கீழ் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.