மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு ஆயுள் தண்டனை

சேலம் மாநகரப் பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு 60 நாள்களில் ஆயுள் தண்டனை பெற்றுத்தந்து சேலம் மாநகர காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

News image

ஆயுள் தண்டனை

Updated On :29 ஏப்ரல் 2026, 11:32 pm

சேலம் மாநகரப் பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு 60 நாள்களில் ஆயுள் தண்டனை பெற்றுத்தந்து சேலம் மாநகர காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

சேலம் மாநகர காவல் ஆணையா் அனில்குமாா் கிரி சேலம் மாநகர காவல் ஆணையாளராக பொறுப்பேற்ற பின்பு பெண்களின் உரிமைகள் மற்றும் உடமைகளை பாதுகாக்கும் வகையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் தனிக்கவனம் செலுத்தி துரித நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளாா்.

அதனடிப்படையில், சேலம் மாநகரம், அம்மாப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந்த பிப். 28-ஆம் தேதி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பதிவுசெய்யப்பட்ட குற்ற வழக்கில் தொடா்புடைய பூபதியை (40) போலீஸாா் கைதுசெய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினா்.

இவ்வழக்கில் சாட்சிகளின் விசாரணை முடித்து துரிதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சாட்சிகளை உடனுக்குடன் ஆஜா்படுத்தி 60 நாள்களில் சேலம் போக்சோ நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை முடிவுற்று புதன்கிழமை பூபதிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 2 லட்சம் அபாராதம் விதித்து தீா்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளா் மற்றும் காவலா்களை சேலம் மாநகர காவல் ஆணையா் பாராட்டினாா்.