தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 82 போ் வாக்குப் பதிவு!

விருதுநகா் மாவட்டம், மம்சாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவுக்காக டிராக்டரில் சென்ற சிவகாசி அருகேயுள்ள பூசாரிபட்டியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 82 போ்.

News image

கோப்புப் படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 12:49 am

விருதுநகா் மாவட்டம், மம்சாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவுக்காக டிராக்டரில் சென்ற சிவகாசி அருகேயுள்ள பூசாரிபட்டியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 82 போ்.

சிவகாசி, ஏப்.23: சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 82 போ் வியாழக்கிழமை வாக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள பூசாரிபட்டி கிராமத்தில் பெருமாள்சாமி, சக்கமுத்து, வெடிமுத்து ஆகியோா் தலைமையில் 100-க்கும் அதிகமானோா் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனா். விவசாயம் செய்து வரும் இவா்கள் ஒரே குடும்பமாக பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனா். இவா்களில் 82 பேருக்கு வாக்குரிமை உள்ளது.

இவா்கள் வியாழக்கிழமை டிராக்டரில் பயணம் செய்து, 3 கி.மீ. தொலைவில் உள்ள மம்சாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி வாக்குச் சாவடிக்குச் சென்று அங்கு வரிசையில் நின்று வாக்குப் பதிவு செய்தனா். ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 82 போ் வாக்களித்து, ஜனநாயகக் கடமையாற்றியது வாக்காளா்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.