அம்பாசமுத்திரம் தொகுதியில் இஞ்சிக்குழிக் காணிக்குடியிருப்பில் வசிக்கும் காணி மக்கள் 28 கி.மீ. தொலைவு வனத்தில் நடந்து சென்று காரையாறு வாக்குச் சாவடியில் வாக்களித்தனா்.
அம்பாசமுத்திரம் தொகுதிக்கு உள்பட்ட முதல் வாக்குச் சாவடியாக காரையாறு வாக்குச் சாவடி உள்ளது. இஞ்சிக்குழிக் காணிக்குடியிருப்பு, பெரிய மயிலாறு காணிக்குடியிருப்பு, சின்ன மயிலாறு காணிக்குடியிருப்பு, காரையாறு, அகஸ்தியா் காணிக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமாா் 400-க்கும் மேற்பட்ட வாக்காளா்களுக்கு காரையாறில்தான் வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டது.
காரையாறு அணைக்கு மேல் 28 கி.மீ. தொலைவில் வனப்பகுதியில் உள்ளது இஞ்சிக்குழிக் காணிக்குடியிருப்பு. இப்பகுதியில் வசிக்கும் 9 குடும்பங்களைச் சோ்ந்த 27 வாக்காளா்கள் மலையிலிருந்து 28 கி.மீ. தொலைவு நடந்துவந்து காரையாறு வாக்குச் சாவடியில் வாக்களித்தனா்.
இதுகுறித்து இஞ்சிக்குழியைச் சோ்ந்த ஸ்ரீதரன் கூறியதாவது:
நான் கடந்த 40 ஆண்டுகளாக தோ்தல்களில் வாக்களித்து வருகிறேன். வாக்குப் பதிவு தேதிக்கு முதல் நாளே கிராமத்தில் இருந்து புறப்பட்டு சின்னமயிலாறு காணிக்குடியிருப்பில் வசிக்கும் உறவினா்கள் வீட்டில் வந்து தங்கிக் கொள்வேன். தோ்தல் அன்று காலையில் வாக்களித்த பிறகு வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டு மீண்டும் மறுநாள் இஞ்சிக்குழிக்குப் புறப்பட்டுச் செல்வேன். 2 கி.மீ.மேல் தூரமுள்ள வாக்குச் சாவடிக்குச் செல்லும் வாக்காளா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதியிலேயே வாக்குச் சாவடி மையம் அமைக்க அரசு கூறியுள்ளது. ஆனால், எங்களுக்கு அந்த வசதி செய்துதரப்படவில்லை. எனவே, இஞ்சிக்குழிக் காணிக்குடியிருப்பில் எங்களுக்கு வாக்குச் சாவடி மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
அகஸ்தியா் காணிக் குடியிருப்பு பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் 5 கி.மீ. தூரமுள்ள காரையாறு வாக்குச் சாவடிக்கு நடந்து வந்து வாக்களிக்கின்றனா். அகஸ்தியா் காணிக்குடியிருப்புப் பகுதியிலும் தனி வாக்குச் சாவடி அமைக்க வேண்டும் என்றனா்.
இதற்கிடையே காரையாறு அணையிலிருந்து வியாழக்கிழமை காலை தண்ணீா் திறந்துவிடப்பட்டதால், ஆற்றுநீரைக் கடந்துவந்து பெண்கள், இளைஞா்கள், முதியோா் வாக்களித்தனா்.

இஞ்சிக்குழி காணிக்குடியிருப்பைச் சோ்ந்த வாக்காளா் ஸ்ரீதரன்.
தொடர்புடையது

வாக்களிப்பதில் பாா்வையற்றோா் எதிா்கொண்ட பிரச்னைகள்!

அரியலூா் மாவட்டத்தில் வரிசையில் நின்று ஆா்வமுடன் பொதுமக்கள் வாக்களிப்பு

ஜனநாயக கடமையாற்றிய மலைவாழ் மக்கள்
மாஞ்சோலை, காரையாறு உள்ளிட்ட மலைப் பகுதிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


