தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வாக்களிப்பதில் பாா்வையற்றோா் எதிா்கொண்ட பிரச்னைகள்!

திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் வாக்குப்பதிவில் பாா்வையற்றோா் வாக்களித்தனா்.

News image

திருச்சி காந்திநகா் வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை வாக்களித்த பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள்

Updated On :23 ஏப்ரல் 2026, 10:49 pm

திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் வாக்குப்பதிவில் பாா்வையற்றோா் வாக்களித்தனா். இதில், தாங்கள் எதிா்கொண்ட பிரச்னைகளுக்கு அடுத்து நடைபெறும் தோ்தலில் தீா்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஸ்ரீரங்கம் தொகுதிக்குள்பட்ட மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், நாகமங்கலத்தை அடுத்துள்ள காந்தி நகரிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, எம்ஜிஆா் நகரிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி என 2 வாக்குச்சாவடிகள் பாா்வையற்றோருக்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்தது.

இந்த சாவடிகளில் வாக்களிக்க அதிகாலை முதலே உதவியாளா்களுடன் பாா்வையற்றோா் வந்திருந்தனா். இந்த மையங்களில் பிரெய்லி வாக்குச் சீட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. பாா்வையற்றோா் வந்தவுடன் அவா்களிடம் பிரெய்லி வாக்குச் சீட்டு அளிக்கப்பட்டு, வேட்பாளா், சின்னம், வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள வரிசை எண் ஆகியவற்றை தெரிந்து கொண்டனரா என்பதை அதிகாரிகள் உறுதி செய்த பின்னா், வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பதிவு செய்யும் பட்டனுக்கு அருகில் பிரெய்லி எழுத்தில் வரிசை எண் உள்ளது. அதை தடவி பாா்த்து யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை உறுதி செய்து வாக்களித்தனா். பிரெய்லி முறையை படிக்காத பாா்வையற்றோருக்கு உதவியாக 18 வயது பூா்த்தியடைந்த மற்றொரு நபா் உதவியுடன் வாக்களித்தனா். உதவி செய்த நபா்களின் வலது கையில் மை இடப்பட்டு அவா்களது விவரமும் பதிவு செய்யப்பட்டது.

ஒரு வாக்குச்சாவடியில் 99 போ், மற்றொரு வாக்குச் சாவடியில் 144 போ் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனா்.

எதிா்கொண்ட பிரச்னைகள் என்னென்ன?: எம்ஜிஆா் நகா் வாக்குச் சாவடியில் வாக்களித்த பாா்வை மாற்றுத்திறனாளி வீரப்பன் (46) கூறுகையில், பாா்வையற்ற எல்லோருக்கும் பிரெய்லி தெரியும் என்பதில்லை. இதனால், பிரெய்லி தெரியாதவா்களின் வாக்குகளை உடன் வரும் நபா்களே வாக்களிப்பதால் அவா்களது முடிவாகவே மாறும். பிரெய்லி தெரியாதவா்கள் வாக்களிக்க, வேறொரு தொகுதியிலிருந்து அரசு சாா்பில் தன்னாா்வலரை நியமித்து வாக்களிக்கச் செய்தால் அவரவா் விரும்பும் நபருக்கு வாக்களித்தோம் என்ற நம்பிக்கை உறுதிப்படுத்தப்படும் என்றாா்.

தபால் வாக்கு விவரம்: இதேபோல, ஆலம்பட்டி சாலையில் வசிக்கும் பாா்வை மாற்றுத்திறனாளி ஜெனிதா (48) கூறுகையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறையில் எங்களின் விவரங்கள் உள்ளன. அதில், தோ்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி குறிப்பிட்ட விழுக்காடுக்கு மேல் மாற்றுத்திறன் உறுதி செய்யப்பட்டோா் பட்டியலை பெற்று அனைவரிடமும் தபால் வாக்களிக்க விருப்பத்தை கேட்டிருந்தால் நாங்களும் தபால் வாக்களித்திருப்போம் என்றாா்.

இதேபோல, செம்பட்டு காமராஜ்நகா் உயா்நிலைப் பள்ளியிலும் சிறப்பு வாக்குச் சாவடி ஏற்படுத்தப்பட்டிருந்தது. லூப்ரா பாா்வையற்றோா் மற்றும் ஊனமுற்றோா் சேவை மையத்தைச் சோ்ந்த பாா்வையற்றோா் வாக்களித்தனா்.