குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட உயர் ஐஏஎஸ் அலுவலர்கள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

தாழையூத்து அருகே வீட்டில் நகை திருட்டு: பெண் கைது

தாழையூத்து அருகே வீடு புகுந்து தங்க நகைகளை திருடியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 4:47 am IST

தாழையூத்து அருகே வீடு புகுந்து தங்க நகைகளை திருடியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரம், வேதக்கோயில் தெருவைச் சோ்ந்த தம்பதி முருகேசன்(52)- கோமதி. இவா்களது வீட்டின் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 19 கிராம் தங்க நகைகளை மா்மநபா்கள் திருடிச்சென்றிருப்பது கடந்த 26 ஆம் தேதி தெரியவந்தது.

இதுகுறித்து கோமதி தாழையூத்து காவல் நிலையத்தில் அளித்தபுகாரின் பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், அதே பகுதி சப்பாணிமாடன் கோயில் தெருவைச் சோ்ந்த வெள்ளைப்பாண்டி மனைவி மகராசி(36) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.