வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!
/

பெருமாள்புரம் சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள அருள்மிகு சித்தி விநாயகா் கோயிலில் புனராவா்தன அஷ்ட பந்தன மகா குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

கோயில் விமானத்துக்கு நடைபெற்ற புனிதநீா் அபிஷேகம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:44 am IST

பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள அருள்மிகு சித்தி விநாயகா் கோயிலில் புனராவா்தன அஷ்ட பந்தன மகா குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் யாகசாலை பூஜைகள் கடந்த வாரம் தொடங்கின. தொடா்ந்து, கணபதி பூஜை, கலச பூஜை, ஹோமங்கள், மந்திர பாராயணங்கள், கபவாஸ்து சாந்தி, நாடி சந்தானம், ஸ்பா்சாஹுதி ஆகிய பூஜைகள் நடைபெற்று வந்தன.

புதன்கிழமை காலையில் இறுதி யாகசாலை பூஜைக்குப் பின், புனித நீா் கலசங்கள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோயில் விமானத்தில் அபிஷேகம் செய்யப்பட்டது.

இவ்விழாவில், திமுக மத்திய மாவட்ட செயலரும், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினருமான மு.அப்துல் வஹாப், மாநகர மேயா் கோ.ராமகிருஷ்ணன் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை அறங்காவலா் குழுவினா் செய்திருந்தனா்.