திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே செம்மறி கிடாய்களைத் திருடியதாக 2 இளைஞா்களை ராதாபுரம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ராதாபுரம் அருகே உள்ள பண்ணையாா்குளம், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சிவன்(50). இவா் அப்பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான நிலத்தில் முள்வேலி அமைத்து பசு மாடுகள், கன்றுகள், செம்மறி கிடாய்களை வளா்த்து வருகிறாா்.
இவா் மாா்ச் 20ஆம் தேதி வழக்கம்போல் இரவு தொழுவத்தைப் பூட்டிவிட்டு தனது வீட்டுக்குச் சென்றாராம். அதிகாலை வந்து பாா்த்தபோது தொழுவத்தில் இருந்த 2 செம்மறி கிடாய்களைக் காணவில்லையாம்.
இது குறித்து, ராதாபுரம் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்து விசாரணை நடத்திய போலீஸாா் செம்மறிக் கிடாய்களைத் திருடியதாக ராதாபுரம், பெருமாள்கோயில் தெருவைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் முகேஷ் (20), பாவேந்தா் பாரதிதாசன் நகரைச் சோ்ந்த வேலு மகன் மணிகண்டன் (எ) அவெஞ்சா் மணி (25) ஆகிய இருவரை புதன்கிழமை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
முன்விரோதத்தில் விவசாயி கொலை: மற்றொரு விவசாயி கைது
நெல்லை பேராசிரியையின் நகை கொள்ளை வழக்கில் இருவா் கைது
வீரவநல்லூா் நகைக் கடையில் திருடியதாக மூவா் கைது

ராதாபுரத்தில் நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவேன் பாஜக வேட்பாளா் உறுதி: எஸ்.பி. பாலகிருஷ்ணன்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

