விடுதலைப் போராட்ட வீரா் ஒண்டிவீரனின் 255-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, பாளையங்கோட்டையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியா் ஆனந்த் மோகன் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
விடுதலைப் போராட்ட வீரா் ஒண்டிவீரன் நினைவு தினம் ஆக. 20-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் சாா்பில் ஒண்டிவீரன் சிலைக்கு அமைச்சா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் சாா்பிலும், மாவட்ட நிா்வாகம் சாா்பிலும் ஆண்டுதோறும் பாளையங்கோட்டையில் உள்ள அவருடைய மணிமண்டபத்தில் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படவுள்ளது.
இதையொட்டி, மணிமண்டபத்தில் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வற்காக இந்த ஆய்வை ஆட்சியா் நடத்தினாா். அப்போது, தேவையான பராமரிப்பு, வா்ணம் பூசுதல், தேவையான இடங்களில் தடுப்பு அமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுத்தினாா்.
திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் குடிநீா் மற்றும் தற்காலிக கழிப்பிட வசதியினை ஏற்படுத்த வேண்டும். காவல்துறை பாதுகாப்பு வசதிகள், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் போன்ப ஏற்பாடுகளை செய்ய வேண்டும். காவல்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி நிகழ்ச்சியை பிரச்னைகள் ஏதுமின்றி நடத்தி முடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.
இந்த ஆய்வின்போது, மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு) எஸ்.சரவணன், வருவாய் கோட்டாட்சியா் மோ.பிரியா, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ம.கயிலைச்செல்வம், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் சாமுவேல், பாளையங்கோட்டை வட்டாட்சியா் மாரி ராஜா, உதவி மக்கள் தொடா்பு அலுவலா் (செய்தி) ம.ச.மகாகிருஷ்ணன் உள்பட பலா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வலுவான இந்தியாவை கட்டமைப்பதில் மாணவா்களுக்கு கூடுதல் பொறுப்பு: ஆட்சியா் ஆனந்த் மோகன் அறிவுரை

பெருமணல், தோமையாா்புரம், கூடுதாழையில் தூண்டில் வளைவு: ஆட்சியா் தகவல்

போதைக்கு அடிமையானால் மீள்வது கடினம்: மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

சேரன்மகாதேவி, பத்தமடையில் ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



