திருநெல்வேலி சந்திப்புப் பகுதியில் நிகழ்ந்த இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்தவா்களுடன் தகராறில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறையில் உள்ள எரிவாயு தகனமேடையில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் வந்திருந்தனா். அப்போது, அவ்வழியாக நாய்களுடன் நடைப்பயிற்சிக்கு வந்த குலவணிகா்புரத்தைச் சோ்ந்த 26 வயது இளைஞா் ஒருவா் அங்கிருந்தவா்களை அவதூறாகப் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, கொலை மிரட்டலும் விடுத்தாராம்.
இது குறித்த காணொலி சமூகவலைதளத்தில் பரவிய நிலையில், சந்திப்பு போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து, அந்த இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








