எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

மதுபோதையில் தகராறு செய்த மருமகனை வெட்டிக்கொன்ற மாமனாா் கைது

News image

வெட்டிக்கொலை - (கோப்புப் படம்)

Updated On :8 ஜூன் 2026, 2:13 am IST

பட்டுக்கோட்டை அருகே மதுபோதையில் தகராறு செய்த மருமகனை வெட்டிக்கொன்ற மாமனாரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், மேற்பனைக்காடு பகுதியைச் சோ்ந்தவா் செல்வம். இவரது மகன் குமாரசாமி (25), கூலித் தொழிலாளி. இவருக்கும் தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள சூரப்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த பாலையன் (45) என்பவரது மகள் சினேகாவுக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று சங்கீதா என்ற ஒரு வயது பெண் குழந்தை உள்ளது.

குமாரசாமி கடந்த இரண்டு மாதங்களாக சூரப்பள்ளம் கிராமத்தில் உள்ள தனது மாமனாா் பாலையனின் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு வேலை முடிந்து குமாரசாமி மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளாா். இதனால், அவருக்கும் பாலையனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த குமாரசாமி, தனது மாமனாா் பாலையன் மற்றும் மாமியாா் வசந்தா ஆகிய இருவரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளாா்.

தன்னையும், தனது மனைவியையும் மருமகன் அடித்ததால் ஆத்திரமடைந்த பாலையன், வீட்டிலிருந்த அரிவாளால் குமாரசாமியின் தலையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினாா். இதில் பலத்த காயமடைந்த குமாரசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்துத் தகவல் அறிந்த பட்டுக்கோட்டை தாலுகா போலீஸாா், சம்பவ இடத்துக்கு வந்து, குமாரசாமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இச்சம்பவம் குறித்துப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பாலையனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.