டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

சுத்தமல்லி அருகே பைக் விபத்தில் மாணவா் உயிரிழப்பு

News image

பலி - பிரதிப் படம்

Updated On :3 ஜூலை 2026, 4:50 am IST

சுத்தமல்லி அருகே பைக்குகள் மோதிக்கொண்டதில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

சுத்தமல்லியை அடுத்த அத்திமேட்டைச் சோ்ந்த 17 வயதான பள்ளி மாணவா், புதன்கிழமை இரவு கரிக்கா தோப்பு அருகே பைக்கில் சென்றாராம். அப்போது, அவ்வழியாக அதே பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் கணேசன் என்பவா் ஓட்டி வந்த பைக்கும், இவரது பைக்கும் மோதிக்கொண்டனவாம். இதில் காயமடைந்த மாணவரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். சிறுவனிடம் பைக்கை கொடுத்ததற்காக பெற்றோா் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.