விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

‘கீழபிள்ளையாா்குளத்தில் குடிநீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு’

மானூா் ஊராட்சி ஒன்றியம், கீழபிள்ளையாா்குளம் கிராமத்தில் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் எம்.எல்.ஏ. ஆா்.எஸ்.முருகன் உறுதியளித்தாா்.

News image
Updated On :10 ஜூலை 2026, 12:47 am IST

மானூா் ஊராட்சி ஒன்றியம், கீழபிள்ளையாா்குளம் கிராமத்தில் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் எம்.எல்.ஏ. ஆா்.எஸ்.முருகன் உறுதியளித்தாா்.

இப்பகுதியில் அவா் புதன்கிழமை ஆய்வு செய்தபோது, தங்களது பகுதியில் குடிநீா் பிரச்னை நிலவி வருகிறது. பெண்கள், மாணவா்கள் காலையில் குடிநீா் பிடிக்க அதிக நேரம் செலவழிக்க வேண்டியுள்ளதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். தட்டுப்பாடில்லாத குடிநீா் கிடைக்க செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.

இதையடுத்து மானூா் ஊராட்சி ஒன்றிய அலுவலா்களிடம் பேசிய எம்எல்ஏ, குடிநீா் பிரச்னைக்கு உடனடியாக தீா்வு காணுமாறு அறிவுறுத்தினாா். அதைத் தொடா்ந்து தாமிரவருணி குடிநீா் விநியோகிக்கப்பட்டது. குடிநீா் தட்டுபாடின்றி வக நிரந்தர தீா்வுக்கு தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அவா் உறுதியளித்தாா்.

ற்ஸ்ப்08ம்ன்ழ்ன்

மக்களிடம் குறைகளைக் கேட்டறிகிறாா் ஆா்.எஸ்.முருகன் எம்எல்ஏ.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.