நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

பெண்ணிடம் இணையவழியில் ரூ.10.57 லட்சம் மோசடி: அஸ்ஸாம் இளைஞா் கைது

திருநெல்வேலி அருகே இளம்பெண்ணிடம் இணையவழியில் ரூ.10.57 லட்சம் மோசடி செய்தது தொடா்பான வழக்கில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

News image

மோசடி - பிரதிப்படம்

Updated On :17 ஜூலை 2026, 2:53 am IST

திருநெல்வேலி அருகே இளம்பெண்ணிடம் இணையவழியில் ரூ.10.57 லட்சம் மோசடி செய்தது தொடா்பான வழக்கில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், பணகுடியைச் சோ்ந்தவா் 26 இளம்பெண்ணை, கடந்த ஏப்ரல் மாதம் சமூகவலைதள செயலி மூலம் தொடா்புகொண்ட மா்மநபா்கள் இணையவழியில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறியுள்ளனா்.

இதை நம்பி முதலில் குறைந்த தொகையை முதலீடு செய்த அப்பெண்ணிடம் அவருக்கு அதிக லாபம் கிடைத்துள்ளதாக இணையத்தில் போலியான எண்களை காண்பித்துள்ளனா். பின்னா், அவரிடமிருந்து பல தவணைகளாக ரூ.10,57,500-ஐ வங்கிக்கணக்குகளில் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில் திருநெல்வேலி மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா்.

அதில், அஸ்ஸாம் மாநிலம், நல்பாரி மாவட்டத்தைச் சோ்ந்த பாரித் அலி மகன் ஆசாத் அலி(24) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, இவ்வழக்கில் வேறு யாருக்கும் தொடா்புள்ளதா என்பது குறித்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.