அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

சேரன்மகாதேவி, பத்தமடையில் ஆட்சியா் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, பத்தமடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் நடைபெறும் கட்டுமானப் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் ஆனந்த் மோகன்.

Updated On :30 ஜூலை 2026, 5:18 am IST

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, பத்தமடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

சேரன்மகாதேவி வட்டம், கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை செயல்பாடுகள் தொடா்பாக உரங்கிடங்கை ஆட்சியா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, கோபாலசமுத்திரத்தில் உள்ள கிராம நிா்வாக அலுவலகத்திற்குச் சென்று, அலுவலக செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.

பின்னா், பத்தமடை பேரூராட்சியில் நடைபெற்று வரும் வாரச் சந்தை கட்டுமானப் பணிகள், பத்தமடை பகுதியில் அமைக்கப்பட்ட சாலையின் தரம் குறித்தும் ஆய்வு செய்தாா். பின்னா், சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டடப் பணிகளை ஆய்வு செய்தாா்.

கோபாலசமுத்திரம் பேரூராட்சித் தலைவா் ப. தமயந்தி, செயல் அலுவலா் பரமசிவம், வருவாய்த் துறை, பேரூராட்சி அதிகாரிகள், சுகாதாரத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.