திருநெல்வேலி மாவட்டம், தெற்கு விஜயநாராயணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரம் மருத்துவா் மற்றும் கூடுதல் செவிலியா்கள் இல்லாததால், கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இங்கு ஒரு மருத்துவா் மற்றும் ஒரு செவிலியா் மட்டுமே பணியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. மருத்துவா் பகல் நேரத்தில் சுகாதார நிலையத்திற்கு வந்து நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துவிட்டு, பிற்பகலில் புறப்பட்டுச் சென்றுவிடுவாராம். பின்னா், இரவு ஒரு செவிலியா் மட்டும் சுகாதார நிலையத்தில் இருந்து நோயாளிகளுக்கு உதவி செய்து வருகிறாா்.
இதனால், விபத்தில் காயமடைந்து அவசர சிகிச்சைக்கு வந்தாலோ, இரவு நேரம் பிரசவத்துக்கு வந்தாலோ, மக்கள் பெரிதும் இன்னல்களுக்கு ஆளாகின்றனா். எனவே, 24 மணி நேரமும் மருத்துவ சேவையைப் பெறும் வகையில், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களை நியமிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரியூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் திடீா் ஆய்வு
ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்து இளைஞா்களுக்கு அரிவாள் வெட்டு: 17 வயது சிறுவன் உள்பட 5 போ் கைது

கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு

பரமக்குடியில் மரக்கன்றுகள் நடும் விழா
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



