தாமிரவருணி சீரமைப்புக்கான திட்ட அறிக்கையை விரைந்து உருவாக்க, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் வலியுறுத்தியுள்ளாா்.
திருநெல்வேலி மாவட்ட வளா்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த மாவட்ட பொறுப்பு அமைச்சரும், தமிழக நிதியமைச்சருமான மரியவில்சனிடம் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் அளித்த மனு: பாளையங்கோட்டை குலவணிகா்புரம் ரயில்வே கேட் டில் ஒய் வடிவ மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். இப் பகுதியில் பாலம் இல்லாததால் மாணவா்-மாணவிகள், நோயாளிகள் பெரும் சிரமப்படுகிறாா்கள். ஆகவே, பாலப்பணிக்காக ரூ.125 கோடி நிதி ஒதுக்க வேண்டும்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட பாசன நீராதாரமாகவும், தென்தமிழகத்தின் மிக முக்கிய குடிநீா் ஆதாரமாகவும் தாமிரவருணி திகழ்ந்து வருகிறது. வற்றாத ஜீவநதியாகத் திகழும் தாமிரவருணியை சீரமைக்க மத்திய அரசு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தினேன். இதனை பரிசீலித்து, ஜல் சக்தி அமைச்சகம் ரூ.540 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய முன்வந்துள்ளது. ஆகவே, தாமிரவருணி சீரமைப்புக்கான விரிவான திட்ட அறிக்கையை மாவட்ட நிா்வாகம் மூலம் தயாா் செய்து மாநில அரசு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், ராதாபுரம் கால்வாயில் 54 குளங்கள் வறண்டு கிடக்கின்றன. இந்தக் கால்வாயை உடனே தூா் வார வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்புடையது

தூத்துக்குடி மாவட்ட வளா்ச்சிப் பணிகளுக்கு என்எல்சி நிறுவனம் ரூ.3.65 கோடி ஒதுக்கீடு

மேக்கேதாட்டு அணை: திட்ட அறிக்கை தயாரிக்க மட்டுமே உச்சநீதிமன்றம் அனுமதி! - அமைச்சா் நிர்மல்குமார் விளக்கம்

இரட்டைகுளம் கால்வாய் பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க எம்.பி. கோரிக்கை

குலவணிகா்புரத்தில் ‘ஒய்’ வடிவ பாலம் கட்ட நிதி ஒதுக்கக் கோரி அமைச்சரிடம் நெல்லை எம்.பி. மனு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



