/
களக்காடு அருகே விற்பனை செய்வதற்காக 50 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
களக்காடு காவல் உதவி ஆய்வாளா் வினுகுமாா் தலைமையிலான காவல்துறையினா் களக்காடு காவல்நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, கலுங்கடி கோயில் அருகே சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த படலையாா்குளத்தைச் சோ்ந்த இசைகெளதம் (20) என்பவரை சோதனை செய்தனா்.
இதில் அவா் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 50 கிராம் கஞ்சாவை போலீஸாா்பறிமுதல் செய்தனா். இதுகுறித்து, காவல் ஆய்வாளா் கண்ணன் வழக்குப் பதிவு செய்து, இசைகெளதமை கைது செய்தாா்.







