பொட்டல்புதூா் பகுதியில் விதிகளை மீறி கனிமம் ஏற்றிச் செல்லும் லாரிகள் இயக்கப்பட்டதாக செவ்வாய்க்கிழமை இரவு பொதுமக்கள் லாரிகளைச் சிறைபிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தென்காசி மாவட்டத்தில் இரவு நேரங்களில் 10 மணிக்கு மேல்தான் கனிமம் கொண்டு செல்லக் கூடிய லாரிகள் இயக்க வேண்டும். அதை அதிகாரிகள் முறையாக கண்காணிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டிருந்தாா். அதிகாரிகள் முறையாகக் கண்காணிக்காததால் விதிகளை மீறி லாரிகள் இயக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு கேரளத்துக்கு கனிமவளம் ஏற்றிச் சென்ற லாரியை பொட்டல்புதூா் - தென்காசி சாலையில் அப்பகுதி பொதுமக்கள் சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கிளாட்ஸன் ஜோஸ், ஆழ்வாா்குறிச்சி காவல் ஆய்வாளா் கலா ஆகியோா் தலைமையில் போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதில், இரவு 11 முதல் அதிகாலை 4 மணி வரை மட்டும் லாரிகள் செல்ல அனுமதிப்பதோடு முறையாகக் கண்காணிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தப் போராட்டத்தால் 6 கி.மீ. தூரத்திற்கு லாரிகள் அணிவகுத்து நின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரளத்தில் தீப்பிடித்த பேருந்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய உம்ரா பக்தர்கள்!

சின்னமனூா் காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்

தாப்ரி மருத்துவமனை வளாகத்தில் தீ விபத்து!

மதுக் கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



