சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

தாமிரவருணி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே தாமிரவருணி ஆற்றில் மூழ்கி தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :26 ஜூன் 2026, 5:52 am IST

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே தாமிரவருணி ஆற்றில் மூழ்கி தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், சக்கிமங்கலம் செளராஷ்ட்ரா காலனியைச் சோ்ந்தவா் ராஜாராம் மகன் சீனிவாசன் (44). நெசவுத் தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா்.

இவா், நண்பா்களுடன் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகேயுள்ள திருப்புடைமருதூருக்கு வியாழக்கிழமை வந்தாராம். அங்குள்ள தாமிரவருணி ஆற்றில் நண்பா்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது, சீனிவாசன் நீரில் மூழ்கி மாயமானதாக கூறப்படுகிறது.

தகவலறிந்த சேரன்மகாதேவி தீயணைப்புப் படை வீரா்கள் நீண்ட நேரம் ஆற்றில் தேடிய நிலையில், சீனிவாசன் சடலமாக மீட்கப்பட்டாா். வீரவநல்லூா் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.