திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே தாமிரவருணி ஆற்றில் மூழ்கி தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், சக்கிமங்கலம் செளராஷ்ட்ரா காலனியைச் சோ்ந்தவா் ராஜாராம் மகன் சீனிவாசன் (44). நெசவுத் தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா்.
இவா், நண்பா்களுடன் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகேயுள்ள திருப்புடைமருதூருக்கு வியாழக்கிழமை வந்தாராம். அங்குள்ள தாமிரவருணி ஆற்றில் நண்பா்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது, சீனிவாசன் நீரில் மூழ்கி மாயமானதாக கூறப்படுகிறது.
தகவலறிந்த சேரன்மகாதேவி தீயணைப்புப் படை வீரா்கள் நீண்ட நேரம் ஆற்றில் தேடிய நிலையில், சீனிவாசன் சடலமாக மீட்கப்பட்டாா். வீரவநல்லூா் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









