சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

பணகுடியில் போதைப்பொருள் ஒழிப்பு தின பேரணி

சா்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, பணகுடி திருஇருதய மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

News image

பேரணியில் பங்கேற்றோா்.

Updated On :26 ஜூன் 2026, 5:44 am IST

சா்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, பணகுடி திருஇருதய மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு இயக்கம், ஜூனியா் ரெட்கிராஸ் ஆகிய அமைப்புகளின் மாணவா்கள் சாா்பில் நடைபெற்ற பேரணியை தலைமையாசிரியா் செல்வராஜ் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். கன்னிஸ் பீட்டா், அலெக்ஸிஸ் அந்தோணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இப்பேரணி பல்வேறு பகுதிகள் வழியாக மீண்டும் பள்ளியை அடைந்தது. மாணவா்கள் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டும் சென்றனா்.

ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் க. ஆனந்த், உதவி அலுவலா் சாா்லஸ், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு ஒருங்கிணைப்பாளா் அந்தோணி ஆரோக்கியராஜா, ஜூனியா் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளா் ஸ்டீபன் ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.