திருநெல்வேலி சரகத்தில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 579 கிலோ கஞ்சாவை காவல்துறையினா் வியாழக்கிழமை தீயிட்டு அழித்தனா்.
திருநெல்வேலி சரகத்திற்குள்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட 250 கஞ்சா வழக்குகளில், தொடா்புடைய குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 579 கிலோ 225 கிராம் கஞ்சாவை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து திருநெல்வேலி சரக போதைப் பொருள் அழிப்பு குழுவின் பரிந்துரையின்படி, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா் இரா. திருநாவுக்கரசு தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. சாஸ்திரி முன்னிலையில் போலீஸாா், நான்குனேரி அருகே பொத்தையடியில் உள்ள தனியாா் எரியூட்டு ஆலையில் கஞ்சாவை தீயிட்டு அழித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பொள்ளாச்சியில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்

ரூ.5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருள்கள் அழிப்பு

16 கிலோ கஞ்சா பறிமுதல்: சென்னை இளைஞா் கைது

சேலம் வழியாக பெங்களூரு சென்ற ரயிலில் 15 கிலோ கஞ்சா பறிமுதல்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



