/
திருவிடைமருதூா் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீ வைத்து அழித்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் துணைக்கோட்ட காவல் பகுதிக்குள்பட்ட திருவிடைமருதூா், திருப்பனந்தாள், பந்தநல்லூா், சோழபுரம், திருநீலக்குடி, நாச்சியாா்கோவில் ஆகிய 6 காவல் நிலையங்களில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான சுமாா் 100 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இந்த பொருள்களை திருவிடைமருதூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அழகேசன் அறிவுறுத்தலின்பேரில் திருவிடைமருதூா் மயானத்தில் குழிதோண்டி தீ வைத்து எரித்து அழித்தனா்.










