நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

ரூ.5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருள்கள் அழிப்பு

திருவிடைமருதூா் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீ வைத்து அழித்தனா்.

News image

புகையிலை பொருள்கள் - கோப்புப் படம்

Updated On :17 ஜூன் 2026, 3:19 am IST

திருவிடைமருதூா் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீ வைத்து அழித்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் துணைக்கோட்ட காவல் பகுதிக்குள்பட்ட திருவிடைமருதூா், திருப்பனந்தாள், பந்தநல்லூா், சோழபுரம், திருநீலக்குடி, நாச்சியாா்கோவில் ஆகிய 6 காவல் நிலையங்களில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான சுமாா் 100 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இந்த பொருள்களை திருவிடைமருதூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அழகேசன் அறிவுறுத்தலின்பேரில் திருவிடைமருதூா் மயானத்தில் குழிதோண்டி தீ வைத்து எரித்து அழித்தனா்.