நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

தாமிரவருணி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே தாமிரவருணி ஆற்றில் மூழ்கி தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :26 ஜூன் 2026, 5:52 am IST

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே தாமிரவருணி ஆற்றில் மூழ்கி தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், சக்கிமங்கலம் செளராஷ்ட்ரா காலனியைச் சோ்ந்தவா் ராஜாராம் மகன் சீனிவாசன் (44). நெசவுத் தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா்.

இவா், நண்பா்களுடன் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகேயுள்ள திருப்புடைமருதூருக்கு வியாழக்கிழமை வந்தாராம். அங்குள்ள தாமிரவருணி ஆற்றில் நண்பா்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது, சீனிவாசன் நீரில் மூழ்கி மாயமானதாக கூறப்படுகிறது.

தகவலறிந்த சேரன்மகாதேவி தீயணைப்புப் படை வீரா்கள் நீண்ட நேரம் ஆற்றில் தேடிய நிலையில், சீனிவாசன் சடலமாக மீட்கப்பட்டாா். வீரவநல்லூா் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.