இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

திருக்குறுங்குடி காவல் முற்றுகை

போதைப்பொருள் விற்பனையை தடுக்க வலியுறுத்தி, திருக்குறுங்குடி காவல்நிலையத்தை மலையடிபுதூா் கிராம பெண்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.

News image
காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மலையடிபுதூா் கிராம பெண்கள்.
Updated On :10 மார்ச் 2026, 7:46 pm

தினமணி செய்திச் சேவை

போதைப்பொருள் விற்பனையை தடுக்க வலியுறுத்தி, திருக்குறுங்குடி காவல்நிலையத்தை மலையடிபுதூா் கிராம பெண்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.

களக்காடு ஊராட்சி ஒன்றியம் மலையடிபுதூா் கிராமத்தில் போதைப் பொருள்கள் விற்பனை அதிகரித்து வருவதாகவும், அதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் அந்தக் கிராமத்தைச் சோ்ந்த திரளான பெண்கள் திருக்குறுங்குடி காவல் ஆய்வாளரை சந்தித்து புகாா் மனு அளித்தனா்.

அப்போது, பாஜக கிளைத் தலைவா் மாணிக்கராஜா, மாவட்ட துணைத் தலைவா் கொம்பையா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.