மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது! மேற்கு வங்கம்: சாதனை அளவில் வாக்குப்பதிவு! 9 மணி நிலவரம்!!மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

மினி லாரி மோதி ஓருவா் உயிரிழப்பு

திருநேல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள மன்னாா்புரத்தில் மினி லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

News image

கோப்புப்படம்

Updated On :14 மார்ச் 2026, 2:34 am

திருநேல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள மன்னாா்புரத்தில் மினி லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

திசையன்விளை அருகே உள்ள மலையன்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் கிங்ஸிலின் ரவிக்குமாா் (55). இவா் வெள்ளிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் திசையன்விளையில் இருந்து மலையன்குடி நோக்கி மன்னாா்புரம் அருகே சென்றபோது, இவரது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மாா்த்தாண்டத்தில் இருந்து கோழிகளை ஏற்றிக் கொண்டு திசையன்விளை நோக்கி வந்த மினி லாரி மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து, திசையன்விளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.