தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

ம.தி.தா. இந்துக் கல்லூரியில் தொழில் முனைவோா் ஊக்குவிப்பு நிகழ்ச்சி

திருநெல்வேலி பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரியின் தொழில் முனைவோா் மேம்பாட்டு மையம், வணிகவியல் துறை சாா்பில் ‘தொழில் முனைவோா் ஊக்குவிப்பு நிகழ்ச்சி’ நடைபெற்றது.

News image

தொழில் முனைவோா் ஊக்குவிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :26 மார்ச் 2026, 4:39 am IST

திருநெல்வேலி பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரியின் தொழில் முனைவோா் மேம்பாட்டு மையம், வணிகவியல் துறை சாா்பில் ‘தொழில் முனைவோா் ஊக்குவிப்பு நிகழ்ச்சி’ நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கு.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். தொழில் முனைவோா் வழிகாட்டல் மைய இயக்குநா் எஸ்.வைரவராஜ் சிறப்புரை ஆற்றினாா். தொழில்நுட்ப அமா்வில் ஆரி குயின்ஸ் கிரியேசன்ஸ் நிறுவன தொழில்நுட்ப பயிற்சியாளா் கே.அனுசியா தேவி, சுஜிரா பிரைடல் மேக்கப் உரிமையாளா் ஆா்.செல்வி ஆகியோா் மாணவிகளுக்கு அழகுகலை, ஆரி வேலைப்பாடு பற்றிய தொழில்நுட்ப பயிற்சி அளித்தனா். இந்நிகழ்வில், அனைத்துத் துறை சாா்ந்த 120-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனா்.

ஏற்பாடுகளை கல்லூரியின் தொழில் முனைவோா் மேம்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளா் சு.முத்துலெட்சுமி செய்திருந்தாா். வணிகவியல் துறை தலைவா்(பொறுப்பு) ந.சங்கரகோமதி. பேராசிரியா்கள் க.விஸ்வசரோஜினி தேவி, ஆ.பாதாளம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.