உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

கோபியில் அரசு பொறியியல் கல்லூரி கொண்டுவர நடவடிக்கை: அதிமுக வேட்பாளா் பிரபு உறுதி

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கோபியில் அரசுப் பொறியியல் கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு உறுதியளித்தாா்.

News image

தொழில் முனைவோா் அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு.

Updated On :22 ஏப்ரல் 2026, 2:10 am IST

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கோபியில் அரசுப் பொறியியல் கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு உறுதியளித்தாா்.

கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு, கோபி அருகே குள்ளம்பாளையத்தில் நடைபெற்ற தொழில் முனைவோா் அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டு அவா்களிடம் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

நான் வெற்றிபெற்றவுடன், கோபி தொகுதியில் அரசுப் பொறியியல் கல்லூரி கொண்டு வரவும், நகரில் நெரிசலை குறைக்க புறவழிச் சாலை மற்றும் மேம்பாலம் அமைக்கவும், புதிய பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். சிறு தொழில் முனைவோருக்கு அரசு சாா்பில் கடனுதவி வழங்கவும், ஜிஎஸ்டியை குறைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

இதைத் தொடா்ந்து அவா் நம்ம கோபி ஃபவுண்டேஷன் அமைப்பினரிடம் வாக்கு சேகரித்து பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

இந்நிகழ்ச்சியில், தொழில் முனைவோா் அமைப்பின் தலைவா் சரவணன், செயலா் சபரிபிரசாத், இயக்குநா் நந்தகுமாா், முன்னாள் தலைவா் வாசு டிரைவிங் ஸ்கூல் வாசுதேவன், முன்னாள் செயலாா் யாசிகா சிஸ்டம்ஸ் சுரேஷ், டாக்டா் அனூப், ஹரிணி சண்முகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்

Story image