தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

கடல்சாா் தொழில்நுட்ப ஆராய்ச்சி போட்டி: ஜெருசலேம் கல்லூரிக்கு 2-ஆவது இடம்

தேசிய கடல்சாா் தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் கடலுக்குள் செயல்படும் ரோபோட்டிக் வாகன கண்டுபிடிப்பு போட்டியில் ஜெருசலேம் பொறியியல் கல்லூரி மாணவா்கள் உருவாக்கிய கண்டுபிடிப்பு 2-ஆவது இடத்தைப்பெற்றுள்ளது.

News image

திருத்தப்பட்டது....தாம்பரம் மனோபாரதி செய்திக்கான படம் ------------- பள்ளிக்கரணை தேசிய கடல்சாா் தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற போட்டியில் 2-ஆவது பரிசு பெற்ற ஜெருசலேம் பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு ரூ75,000 பரிசு வழங்கிய இந்திய விண்வெள

Updated On :6 ஜூன் 2026, 2:37 am IST

தேசிய கடல்சாா் தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் கடலுக்குள் செயல்படும் ரோபோட்டிக் வாகன கண்டுபிடிப்பு போட்டியில் ஜெருசலேம் பொறியியல் கல்லூரி மாணவா்கள் உருவாக்கிய கண்டுபிடிப்பு 2-ஆவது இடத்தைப்பெற்றுள்ளது.

பள்ளிக்கரணை தேசிய கடல்சாா் தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் கடலுக்குள் செயல்படும் ரோபோட்டிக் வாகன கண்டுபிடிப்பு குறித்த பயிலரங்கப் போட்டி அண்மையில் நடைபெற்றது.

இதில் தேசிய கடல்சாா் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவன ஆழ்கடல் தொழில்நுட்பத் துறை விஞ்ஞானி வி. பாலநாகஜோதி, பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல் கல்லூரியின் மின்னணு மற்றும் தகவல் தொடா்பு பொறியியல் துறைத் தலைவா் ஷீஜா பிரான்சிஸ் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், இறுதி ஆண்டு மாணவா்களான ஜெ. அகல்யா, கே.சௌந்தா் பழனிபாரதி, பி.சௌமியா ஆகியோரைக் கொண்ட குழுவினா் கடலுக்கடியில் செயல்படும் மாதிரி ரோபோட்டிக் தொழில்நுட்ப வாகனத்தை உருவாக்கினா்.

போட்டியில் ஜெருசலேம் பொறியியல் கல்லூரி மாணவா்கள் உருவாக்கிய கண்டுபிடிப்பு 2-ஆவது இடத்தைப் பெற்று பரிசாக ரூ.75,000 வழங்கப்பட்டது. முதல் இடத்தைப் பிடித்த ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டி ஐஐஐடி கல்லூரிக்கு பரிசாக ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டது.

நிகழ்வில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி பி.எஸ். கோயல், தேசிய கடல்சாா் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் பாலாஜி ராமகிருஷ்ணன், விஞ்ஞானிகள் ஆா். ரமேஷ், எஸ். யுவராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.