முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

கடல்சாா் தொழில்நுட்ப ஆராய்ச்சி போட்டி: ஜெருசலேம் கல்லூரிக்கு 2-ஆவது இடம்

தேசிய கடல்சாா் தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் கடலுக்குள் செயல்படும் ரோபோட்டிக் வாகன கண்டுபிடிப்பு போட்டியில் ஜெருசலேம் பொறியியல் கல்லூரி மாணவா்கள் உருவாக்கிய கண்டுபிடிப்பு 2-ஆவது இடத்தைப்பெற்றுள்ளது.

News image

திருத்தப்பட்டது....தாம்பரம் மனோபாரதி செய்திக்கான படம் ------------- பள்ளிக்கரணை தேசிய கடல்சாா் தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற போட்டியில் 2-ஆவது பரிசு பெற்ற ஜெருசலேம் பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு ரூ75,000 பரிசு வழங்கிய இந்திய விண்வெள

Updated On :6 ஜூன் 2026, 2:37 am IST

தேசிய கடல்சாா் தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் கடலுக்குள் செயல்படும் ரோபோட்டிக் வாகன கண்டுபிடிப்பு போட்டியில் ஜெருசலேம் பொறியியல் கல்லூரி மாணவா்கள் உருவாக்கிய கண்டுபிடிப்பு 2-ஆவது இடத்தைப்பெற்றுள்ளது.

பள்ளிக்கரணை தேசிய கடல்சாா் தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் கடலுக்குள் செயல்படும் ரோபோட்டிக் வாகன கண்டுபிடிப்பு குறித்த பயிலரங்கப் போட்டி அண்மையில் நடைபெற்றது.

இதில் தேசிய கடல்சாா் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவன ஆழ்கடல் தொழில்நுட்பத் துறை விஞ்ஞானி வி. பாலநாகஜோதி, பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல் கல்லூரியின் மின்னணு மற்றும் தகவல் தொடா்பு பொறியியல் துறைத் தலைவா் ஷீஜா பிரான்சிஸ் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், இறுதி ஆண்டு மாணவா்களான ஜெ. அகல்யா, கே.சௌந்தா் பழனிபாரதி, பி.சௌமியா ஆகியோரைக் கொண்ட குழுவினா் கடலுக்கடியில் செயல்படும் மாதிரி ரோபோட்டிக் தொழில்நுட்ப வாகனத்தை உருவாக்கினா்.

போட்டியில் ஜெருசலேம் பொறியியல் கல்லூரி மாணவா்கள் உருவாக்கிய கண்டுபிடிப்பு 2-ஆவது இடத்தைப் பெற்று பரிசாக ரூ.75,000 வழங்கப்பட்டது. முதல் இடத்தைப் பிடித்த ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டி ஐஐஐடி கல்லூரிக்கு பரிசாக ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டது.

நிகழ்வில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி பி.எஸ். கோயல், தேசிய கடல்சாா் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் பாலாஜி ராமகிருஷ்ணன், விஞ்ஞானிகள் ஆா். ரமேஷ், எஸ். யுவராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.