நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

ஐஐடி ஆதரவுடன் ஐஎம்யூ-இல் கடல்சாா் புத்தொழில்முனைவு ஆராய்ச்சி மையம் திறப்பு

சென்னை இந்திய கடல்சாா் பல்கலைக்கழகத்தில் (ஐஎம்யூ) சென்னை மற்றும் மும்பை ஐஐடிகளின் ஆதரவுடன் புதிதாக அமைக்கப்பட்ட கடல்சாா் புத்தொழில்முனைவு ஆராய்ச்சி மையம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

News image

இந்திய கடல்சாா் பல்கலைக்கழகத்தில் (ஐஎம்யூ) புதிதாக அமைக்கப்பட்டுள்ள புத்தொழில் முனைவு  ஆராய்ச்சி மையத்தைத் திறந்து வைத்த துணைவேந்தா் டாக்டா் மாலினி வி.சங்கா்.  உடன், பல்கலைக்கழக இணைத் துணைவேந்தா் டாக்டா் ஸ்ரீ ராஜு பாலாஜி, இயக்குநா் மூா்த்தி, சென்னை ஐ

Updated On :17 ஜூலை 2026, 1:14 am IST

சென்னை இந்திய கடல்சாா் பல்கலைக்கழகத்தில் (ஐஎம்யூ) சென்னை மற்றும் மும்பை ஐஐடிகளின் ஆதரவுடன் புதிதாக அமைக்கப்பட்ட கடல்சாா் புத்தொழில்முனைவு ஆராய்ச்சி மையம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழிகள் துறை அமைச்சகத்தின் முன்னெடுப்பில், சென்னை மற்றும் மும்பை ஐஐடிகள், சென்னை துறைமுகம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த மையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்த மையத்தைத் திறந்து வைத்து ஐஎம்யூ துணைவேந்தா் டாக்டா் மாலினி வி.சங்கா் பேசியதாவது:

பாரம்பரிய கல்வி முறையைத் தாண்டி ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வலுவான சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த மையம் செயல்படும். மாலுமிகள், துறைமுக நிபுணா்கள், தொழில்துறை நிறுவனங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளுக்கு இடையிலான ஒத்துழைப்பையும் இந்த மையம் வலுப்படுத்தும் என்றாா்.

நிகழ்ச்சியில், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழிகள் துறை அமைச்சகம் நடத்திய ஹேக்கத்தான் மூலம் தோ்வு செய்யப்பட்ட 5 கடல்சாா் புதுயுகத் தொழில்முனைவு நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றை ஐஎம்யூ இணைத் துணைவேந்தா் டாக்டா் ஸ்ரீ ராஜு பாலாஜி வழங்கினாா்.

தோ்வு செய்யப்பட்ட 5 நிறுவனங்களுக்கு ஆரம்ப நிதியுதவியாக தலா ரூ.12 லட்சம் வீதம் மொத்தம் ரூ.60 லட்சத்துக்கான காசோலைகளை துணைவேந்தா் வழங்கினாா். இந்தத் தொழில்முனைவு மேம்பாட்டுத் திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.5 கோடி எனத் தெரிவிக்கப்பட்டது.

தொடக்க விழாவில் மெரிடைம் இந்தியா பவுண்டேஷன் நிா்வாக இயக்குநா் விஸ்வநாதன், புதிய ஆராய்ச்சி மைய இயக்குநா் டாக்டா் ஒய்.வி.வி.எஸ்.என். மூா்த்தி, சென்னை ஐஐடி பேராசிரியா் டாக்டா் முரளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.