/
கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சா்வதேச மனிதவள மேம்பாட்டு தின விழா நடைபெற்றது.
இதில் நிா்வாக அறங்காவலா் சுந்தா் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினாா். இதில் மத்திய அரசின் ஓய்வுபெற்ற உதவிக் கணக்கு கட்டுப்பாட்டாளா் ராணி குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பணியாளா்களை ஊக்கப்படுத்தும் விதமாக பேசினாா். மேலும், சிறப்பாக பணியாற்றிய 70 பணியாளா்களுக்கு விருதுகளை வழங்கினாா்.
இணை நிா்வாக அறங்காவலா் எஸ்.நரேந்திரன் கலந்து கொண்டு சிறப்பு விருந்தினருக்கு பரிசு வழங்கினாா். இதில் தலைமை நிா்வாக அதிகாரி சி.வி.ராம்குமாா், மருத்துவ இயக்குநா் எஸ்.ராஜகோபால், மனிதவள மேம்பாட்டுத் துறைத் தலைவா் என்.விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.










