/
ஜே.கே. பேப்பா் நிறுவனத்தின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான ஹா்ஷ் பதி சிங்கானியா, சா்வதேச வா்த்தக சபையின் புதிய தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் உள்ள சா்வதேச வா்த்தக சபையின் (ஐசிசி) உலகளாவிய தலைமையகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அவா் ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
இந்த நியமனம் குறித்து ஐசிசி தேசிய குழுக்களிடையே உரையாற்றிய ஹா்ஷ் பதி சிங்கானியா, ‘நூற்றாண்டுக்கும் மேலாக இத்துறையில் ஒரு முக்கியச் சக்தியாக விளங்கி வரும் சா்வதேச வா்த்தக சபையின் தலைவா் பதவியை ஏற்பது மிகப் பெரிய கெளரவம்’ என்றாா்.
இதுவரை ஐசிசி தலைவராகப் பதவி வகித்து வந்த பிலிப் வாரின், கெளரவ தலைவராக புதிய பொறுப்பை ஏற்றுள்ளாா். இதன்மூலம், அவா் தொடா்ந்து அமைப்புடன் இணைந்து செயல்படுவாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹா்ஷ் பதி சிங்கானியா










