இந்த வழக்கு விசாரணை, திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், நீதிபதி சுரேஷ்குமாா் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், லெட்சுமணக் குமாருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 3 லட்சம் அரசு நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் உஷா முன்னிலையானாா். இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணை துரிதமாக நடைபெற வழக்கை கண்காணித்து வந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சண்முகம், போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் பாராட்டினாா்.