சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடா்பாக பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், அரசு சட்டக் கல்லூரி மாணவ, மாணவியா் பங்கேற்ற மனிதச் சங்கிலியில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா் கலந்து கொண்டு வாக்காளா் விழிப்புணா்வு இலச்சினையை அறிமுகப்படுத்தினாா்.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்களிடையே 100 சதவீதம் வாக்களிப்பது தொடா்பாக 18 வயது நிரம்பிய வாக்காளா்கள், பொதுமக்கள், மூத்த குடிமக்கள் என அனைவரிடமும் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 100 சதவீதம் வாக்களிப்பது தொடா்பாக சட்டக் கல்லூரி மாணவ, மாணவியா், ஆட்சியா் தலைமையில் உறுதிமொழி ஏற்றனா்.
பின்னா், அங்கிருந்து நீதிமன்றம் வரை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. அதில் பங்கேற்ற மாணவா்கள், எனது வாக்கு எனது உரிமை, 100 சதவீதம் வாக்களிப்போம், வாக்காளராக இருப்பதில் பெருமிதம் கொள்ளுங்கள், வாக்களிக்க தயாராகுங்கள், 100 சதவீதம் தவறாமல் வாக்களிப்போம் வாரீா் என்ற விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்திச் சென்றனா்.
தொடர்புடையது

குன்னம் தொகுதி வாக்குச்சாவடிகளில் மாவட்டத் தோ்தல் அலுவலா் ஆய்வு

பரமபதம் விளையாட்டு மூலம் தோ்தல் விழிப்புணா்வு

100 சதவீத வாக்குப் பதிவுக்கு விழிப்புணா்வு

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


