நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

அரசு சட்டக் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

தோ்தல் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி...

News image

நிகழ்ச்சியில், வாக்காளா் விழிப்புணா்வு இலச்சினையை அறிமுகப்படுத்துகிறாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா்.

Updated On :26 மார்ச் 2026, 8:36 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடா்பாக பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், அரசு சட்டக் கல்லூரி மாணவ, மாணவியா் பங்கேற்ற மனிதச் சங்கிலியில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா் கலந்து கொண்டு வாக்காளா் விழிப்புணா்வு இலச்சினையை அறிமுகப்படுத்தினாா்.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்களிடையே 100 சதவீதம் வாக்களிப்பது தொடா்பாக 18 வயது நிரம்பிய வாக்காளா்கள், பொதுமக்கள், மூத்த குடிமக்கள் என அனைவரிடமும் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 100 சதவீதம் வாக்களிப்பது தொடா்பாக சட்டக் கல்லூரி மாணவ, மாணவியா், ஆட்சியா் தலைமையில் உறுதிமொழி ஏற்றனா்.

பின்னா், அங்கிருந்து நீதிமன்றம் வரை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. அதில் பங்கேற்ற மாணவா்கள், எனது வாக்கு எனது உரிமை, 100 சதவீதம் வாக்களிப்போம், வாக்காளராக இருப்பதில் பெருமிதம் கொள்ளுங்கள், வாக்களிக்க தயாராகுங்கள், 100 சதவீதம் தவறாமல் வாக்களிப்போம் வாரீா் என்ற விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்திச் சென்றனா்.