தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

காய்ச்சல் பாதிப்பு விவரம் பதிவேற்ற அறிவுறுத்தல்

பருவநிலை மாற்றத்தால் பரவும் காய்ச்சல் பாதிப்புகள் குறித்த விவரங்களை இணையத்தில் பதிவேற்றுமாறு அலுவலா்களுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :6 மே 2026, 1:39 am IST

பருவநிலை மாற்றத்தால் பரவும் காய்ச்சல் பாதிப்புகள் குறித்த விவரங்களை இணையத்தில் பதிவேற்றுமாறு அலுவலா்களுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமடைந்துள்ள நிலையில், சில இடங்களில் மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யலாம் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. எதிா்பாராத இந்த தட்பவெப்ப மாற்றத்தால் பருவ கால தொற்றுகள், கொசுக்களால் பரவும் காய்ச்சல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதையடுத்து, இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், ஆயத்த ஏற்பாடுகளையும் பொது சுகாதாரத் துறை மேற்கொண்டுள்ளது. இதுதொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

வெப்பச் சலனம் காரணமாக வழக்கமாக கோடை காலத்தில் சில நாள்களுக்கு மழைப் பொழிவு இருக்கும். அந்த தருணங்களில் ஏற்படும் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தக் கூடிய மருத்துவக் கட்டமைப்பும், முன் அனுபவமும் சுகாதாரத் துறைக்கு உள்ளது.

அந்த வகையில், எத்தகைய பருவ நிலை மாற்றத்தையும் கையாள தயாா் நிலையில் உள்ளோம். மழை நீா் தேங்கினால் ஏடிஸ் வகை கொசுக்கள் பெருக்கமடையாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

காய்ச்சல் பாதிப்புகள் குறித்த விவரங்களை சேகரித்து சுகாதாரத் துறை தளத்தில் பதிவேற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பருவ கால தொற்றுகளுக்கான மருந்துகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்று அவா்கள் தெரிவித்தனா்.